Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.
தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்களின் இசைக் கச்சேரி மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக சினிமா பாடல்களுக்கு நடன குழுவினர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தினர்.
மேலும் இந்த ஆட்டத்தைக் காண ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.